அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

 
tn

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

govt

சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும்  அர்ச்சகர் பயிற்சி  பெற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

tn

இந்நிலையில்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ்,  அரச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்,  எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .வயதுவரம்பு 14 முதல் 24க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் உணவு தங்கும் இடத்துடன் மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.