பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி!!

 
madan

ஆபாசமாக பேசிய வழக்கில், புழல் சிறையில் இருக்கும் பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப் ஸ்டீமிங்கில்  விளையாடியதுடன்,  ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதன் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

pubg
மதனின் யூடியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் வீடியோ ,ஆடியோக்கள் வெளியான நிலையில்  யூட்யூப் சேனலை நிர்வகித்து வந்த அவரது மனைவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த  ஜூன் மாதம் மதன் கைதானார்.  இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.  மதனின் மனைவிக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில்,  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக சிறையில் உள்ளார்.

pubg

இந்நிலையில்  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக  தெரிகிறது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் உள்நோயாளியாக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது  அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மதன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்பது கவனிக்கத்தக்கது.