திமுகவுக்கு துணைபோகும் ஓபிஎஸ்- காமராஜ் குற்றச்சாட்டு

 
kamaraj

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

காமராஜர் சிலைக்கு மரியாதை செய்த ஓ.பி.எஸ்! | nakkheeran

இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், “தன்னுடைய வாழ்நாளில் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் தொடங்கிய இந்த இயக்கத்தை எவராலும் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு, புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு இருந்த மாஸ் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துள்ளது. ஒன்னரை கோடி பேர் தொண்டராக இருக்கக்கூடிய இந்த அதிமுகவிற்கு அதை 2 கோடி பேர் உறுப்பினர் ஆக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விருப்பப்பட்டு அனைத்து நிர்வாகிகளிடமும் பேசி அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் இந்த திருவாரூர் மாவட்டத்தில் தொகுதிக்கு 75,000 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் . மற்ற கட்சிகளில் எதிரிகள் மட்டும் தான் இருப்பார்கள், ஆனால் இந்த அதிமுகவிற்கு மட்டும்தான் எதிரியும் இருப்பார்கள், துரோகியும் இருப்பார்கள். எதிரியையும் துரோகியையும் ஒரே நேரத்தில் வெல்லக்கூடிய வல்லமை படைத்தது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி வென்று காட்டி இருக்கிறார் . இன்றைக்கு ஓபிஎஸ் இருக்கிறார் அவருடன் நான்கு , ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் திமுகவுக்கு துணை போகிறார்கள், இது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிகிறது. அதனால் தான் கட்சிக்காரர்களும் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. பொதுமக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்” எனக் கூறினார்.