இந்த ஆட்சிக்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என்ற எதேச்சாதிகார மனநிலை... ஜெயக்குமார் காட்டம்
Jan 14, 2025, 16:38 IST1736852934414
எத்தனை வழக்குகளை தொடுத்து எங்களை தடுத்து விட முடியும்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “எத்தனை வழக்குகளை தொடுத்து எங்களை தடுத்து விட முடியும்? பொங்கல் பரிசு தொகுப்பில் ₹2500 ரூபாய் ரொக்க பரிசு இடம் பெறாததை குறிப்பிட்டு பல தனியார் இடங்களில் வைத்த பதாகைகளை அவசரம் அவசரமாக அகற்ற முயன்றுள்ளது காவல்துறை!
எந்த வகையிலும்-எந்த கேள்வியும் இந்த ஆட்சிக்கு எதிராக எழுப்ப கூடாது என்ற எதேச்சாதிகார மனநிலை மன்னருக்கும் அவரது மகனுக்கும் உள்ளது. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ஆட்சியில் அமர்ந்து மக்களை முட்டாளாக்கி கொண்டு இருப்பதும் எதிர்கட்சி-கூட்டணிக் கட்சி என எல்லா இயக்கங்களையும் முடக்கி கொண்டு இருப்பதெல்லாம் இன்னும் ஒரு வருடம் தான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


