"எமிஸ் மூலம் நடவடிக்கை தேவை" - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

 
ops

எமிஸ்  மூலம் ஆசிரியர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை களைய, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பள்ளிக்கல்வித்துறையில் தினம் ஒரு உத்தரவு என்று மாறி, மாறி வரும் உத்தரவுகளால் , ஆசிரியர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகுகிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மேலாண்மை தகவல் மையம் அதாவது எனப்படும் பதிவு முறையை அறிமுகப்படுத்த பட்டதாகவும் , இதில் மாணவ மாணவியரின் பெயர்,  முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் , ஆசிரியர்கள் வருகை பதிவும்,  இதன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் , தற்போது மாணவ மாணவியரின் வருகை பதிவினையும்,  எமிஸ்  மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக,  இந்த உத்தரவின் காரணமாக ஆசிரியர்களின் முக்கியமான பணியான கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  மாணவ மாணவியரின் வருகை பதிவு செய்யவே பாதி நாள் போய் விடுகிறது என்றும்,  மீதிநாளில்  என்ன செய்வது என்று புரியாமல் ஆசிரியர்கள் திகைத்து கொண்டிருப்பதாகவும்,  பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

govt

 கல்விப் பணியைத் தவிர பிற பணிகளை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் போது அவர்களுக்கு அவற்றை செய்வதற்குரிய நேரம் கிடைக்கிறதா?  என்பதை அறிந்து அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும் என்றும் இதுபோன்ற தொடர் பணியை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது மட்டுமல்லாமல் மாணவ மாணவியரின் உணவு விவரங்கள் சுகாதார தகவல்கள் பெண் குழந்தைகள் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் எமிஸ் மூலம் பதிவு செய்ய சொல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பெண் குழந்தைகள் தங்களின் இயற்கை சார்ந்த விவரங்களை தங்களது பெண் மருத்துவரிடமோ சொல்வார்களே தவிர,  ஆசிரியர்களிடம் சொல்ல தயங்குவார்கள்.  இதுகுறித்து ஆசிரியர்கள் குறிப்பாக ஆண் ஆசிரியர்கள் , பெண் குழந்தைகளிடம் விபரங்களைக் கேட்பது என்பதோ?  அல்லது அவர்களின் பெண் குழந்தைகள் சொல்வது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.  இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  இன்னும் சொல்லப்போனால் சக மாணவிகளை இது போன்ற விபரங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.  இந்த உத்தரவு மாணவியரிடையேயும் ,  ஆசிரியர்களிடையேயும் , பெற்றோர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  பெண் குழந்தைகளிடம் இது  தொடர்பான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. 

ops

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு தொடர்புடையோர் அழைத்து பேசி,  பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்கள் கேட்கப்படுவதை தவிர்க்கவும்,  மாணவ மாணவிக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் , ஆசிரியர் கூடுதல் சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.