“நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவதற்கு தயாராக உள்ளோம்”- ஓபிஎஸ்

 
ops ops

ஒற்றை தலைமை ஏற்றால் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்கள், எந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்? அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் தாழ்வு என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ops

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பஞ்சமி நிலத்தை நான் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. முதலில் அது பஞ்சமி நிலம் கிடையாது, அந்த இடத்தை சுப்புராஜ் என்பவரிடன் 2022 ஆம் ஆண்டு வாங்கினேன், அந்த இடம் குறித்து சிலர் புகார் அளித்ததன் அடிப்படையில் ஒரு ஏழு மாதத்தில் மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கும் அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது வரை எனக்கு எந்த ஒரு நோட்டீஸ் -ம் வரவில்லை. 50 ஆண்டு காலம் இரு தலைவர் உருவாக்கியது தான் அதிமுகவே. பைலா 45 விதியின் படி பொதுச்செயலாளர் பதவி திருத்தம் ரத்து செய்யக்கூடாது, தேர்தல் மூலமாக தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக விதியை மீறும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வை திருத்தம் செய்துள்ளனர். அதிமுக சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறேன்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு போவது தான் இந்த திட்டம். பம்பிங் செய்து அவிநாசி பகுதிக்கு கொண்டு செல்வதே இந்த திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கோரிக்கை மோடியிடம் வைத்தார்கள். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டால் நானே செய்து கொடுப்பேன் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக கூறினார். மாநில அரசின் நிதியை கொண்டு இத்திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா மட்டுமே. இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு  அவர்தான் பதில் கூற வேண்டும். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தான். அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்ற தேர்தலின்போது நானும் செங்கோட்டையனும் தான் பணி செய்தோம்.

என்னை தோற்கடிக்க ஒரு ஆளை நிறுத்தினார் ஆர்.பி உதயகுமார். என்ன நடந்தது அதிமுக டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக டெபாசிட் வாங்காதது எனக்கு வருத்தமாக உள்ளது. அதிமுகவிற்கு கிடைத்த இறையருள் எடப்பாடி பழனிச்சாமி? நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவதற்கு தயாராக உள்ளோம். எனக்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அனைவரும் இணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் நான் உட்பட...  நான் அதிமுகவில் இணைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் தான் நல்லது என்று கூறுவேன்” என்றார்.