ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை - காரணம் தெரியுமா?

 
ops eps

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர்  'தமிழ் புத்தாண்டு' வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய “தமிழ்ப் புத்தாண்டு ” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி" என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ops eps

புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்! “சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!” என்று உளம் மகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில், அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ் நாட்டினை மேலும் உயர்த்திட இத்திருநாளில் உறுதி ஏற்போம்.

eps ops

இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் என மனதார வாழ்த்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது நெஞ்சார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு ” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.