"குடும்பத்தை பற்றி தான் முதல்வருக்கு கவலை” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

 
tn

சொத்து வரி உயர்வை கண்டித்தும் வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.  அதன்படி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வருகிறார். அதேபோல கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்று கலந்து கொண்டுள்ளார்.

tn

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களை பற்றி அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்பட்டு கொண்டு உள்ளார். மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது" என்றார்.

tn

அதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளது திமுக; கொரோனா பரவல் முடிவடையாத சூழலில் சொத்துவரி உயர்வு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது என்றார்.