வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-ஆவது பிறந்த நாள் - அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது

 
admk office

‘சுதந்திரப் போராட்ட வீரர்' வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264-ஆவது பிறந்த 3.1.2024 புதன் கிழமை காலை 10 மணியளவில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திரு. வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டும். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு. மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.