அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

 
tn

அடையாறு கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rgr

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.  நீர் வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. 
 

tn

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.