#BREAKING வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!!

 
RG

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98.

TB

எம்.எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர்.  இவர் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் அமைப்பாளர் இவரே ஆவார்.

TH

கும்பகோணத்தில் பிறந்த இவர் குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.  அத்துடன்  தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றுள்ளார்   

TH

இந்நிலையில் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20க்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உயிர் பிரிந்தது.  உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.