அதிமுக புகார்..! கருணாநிதி நினைவிடத்தில் ஒலி ஒளி காட்சிகளை நிறுத்த வேண்டும் ..!

 
1

அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு வழங்கியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற விதமாக அங்கே உள்ள காட்சியரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒலி ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும், அந்த காணொளி அரங்கத்தை மூடி முத்திரையிட வேண்டும் என்றும், மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒளி அமைப்பு திமுகவின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது என்றும், அதை ஒளிராமல் நிறுத்த வேண்டும் என்றும், மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அந்த ஒலி ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகாரளித்துள்ளார். மேலும், திமுகவின் சின்னம் தெரிவது போல் உள்ள ஒளி அமைப்பையும் நிறுத்த வேண்டும் என்றும் ஆர்.எம்.பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு வழங்கியுள்ளார்.