மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 
supreme court supreme court

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடிக்கு  எதிராக மேல்முறையீடு செய்யும் போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என அதிமுக தனது மனுவில் தெரிவித்துள்ளது.