தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாள் - அதிமுக முக்கிய அறிவிப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளை முன்னிட்டு வருகிற 03 தேதி எடப்பாடி பழனிசாமி அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-ஆவது நினைவு நாளான 3.8.2023 - வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்மாலை அணிவித்தும், திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துதல் : 3.8.2023 - வியாழக் கிழமை. pic.twitter.com/J3ulw1TgjF
— AIADMK (@AIADMKOfficial) July 29, 2023
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகளும்; மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.