சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

 
tn

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு நடத்தினர் . எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக முறையிட தலைமைச் செயலகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.  சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க முடிவு செய்த நிலையில் சபாநாயகருடன் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது.

tn

ஓ. பன்னீர்செல்வம் , வைத்தி லிங்கம் மனோஜ் பாண்டியன் இருக்கைகளை மாற்றி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் எனவும் சபாநாயகரிடம்  வலியுறுத்தியுள்ளனர்.

ep

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது சட்ட , விதிகளின்படி மூன்றாவது முறையாக சபாநாயகரை சந்தித்து சட்டப்பேரவையில் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மனு அளித்துள்ளோம்.  இருக்கையை ஒதுக்க முடியுமா? இல்லையா என சபாநாயகர் பதில் கடிதம் தர கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தான் அங்கீகரித்துள்ளது. கடிதம் குறித்து பரிசளிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார் என்றார்.