என்.எல்.சி. விவகாரம் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி அதிமுக எம்.பி.சிவி சண்முகம் நோட்டீஸ்

 
cv shanmugam

என்எல்சி நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் முதன்மையான விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துகிறது எனவும், இதுகுறித்து விவாதிக்க கோரியும் அதிமுக எம்.பி. சிவி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

CV Shanmugam

இந்நிலையில், மேல் வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களை அளித்து என்.எல்.சி. நிறுவனம் கால்வாய் அமைக்கும் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. சிவி சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில், என்எல்சி நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் முதன்மையான விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்பி சிவி சண்முகம் கூறியுள்ளார்.