தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவுடன் அதிமுக தீவிர ஆலோசனை!

 
admk

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தீவிரமாக தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.  

EPS

அதிமுக கூட்டணி தொடர்பாக தேமுதிக , பாமக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று  வருகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி ,கே.பி. அன்பழகன் பெஞ்சமின் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம் மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் 1 மாநிலங்களவை பதவி கேட்டுள்ள நிலையில், அதனை அதிமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.