"தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள்..." - மீண்டும் பரபரப்பை கிளப்பும் சசிகலா

 
sasikala


தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எனக்  குறிப்பிட்டு  சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில் சென்ற அனைத்து இடங்களிலும் கழகத் தொண்டர்களும் ,பொதுமக்களும் ,வழிநெடுகிலும் நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பினாலும், கள்ளம் கபடமற்ற உங்களுடைய உண்மையான அன்பாலும் மனம் நெகிழ்ந்து போனேன்.  அனைவரும் என்னை காண்பதற்காக வெகு நேரம் காத்திருந்த நிலையில் , உங்களையெல்லாம் சந்தித்து வந்த பின்னர் விமான பயணத்தையும் மேற்கொள்ள இயலாமல் , சாலை மார்க்கமாக பயணித்து சென்னை இல்லத்திற்கு வந்தடைந்தேன்.

sasikala

நம் புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவியையும் ஒவ்வொரு கழகத் தொண்டர்களின் கண்களில் என்னால் காணமுடிந்தது. உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது.  அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள் ,இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவரும் ஒன்று சேர தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பினீர்கள்.  நீங்கள் அனைவரும் என்மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை,  வீண் போகாத நிலையில் உங்கள் அனைவருக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ,எஞ்சியுள்ள வாழ் நாட்களை அர்ப்பணித்த நிச்சயம் நிறைவேற்றுவேன். 

sasikala

 எத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து, நம் புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவியின் வழியில் கழகத்தை காப்போம்; கவலை வேண்டாம் . நம் இயக்கத்தை ஆரம்பித்த புரட்சித்தலைவர் , சிறப்பாக வழிநடத்திய  புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் , அதே மக்கள் ஆட்சியை மீண்டும் அமைத்தும்  'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தை மனதில் வைத்தும்  , தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன்,  இது உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார்.