முதல்வர் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு..

 
முதல்வர் உரையை புறக்கணித்து  அதிமுக வெளிநடப்பு..


எதிர்க்கட்சி தலைவர் உரையை நேரலை செய்யாததைக் கண்டித்து , அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  

தமிழக  சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீது பதிலுரை  ஆற்றினார். ஆனால் அதனை புறக்கணித்து  சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுக உறுப்பினர்கள்  கடும் அமளியில் ஈடுபட்டனர்.

assembly

இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து  எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.  ஆனால் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.