எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது..
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில், இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதலான அதிகாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுவதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கா்நாடக தோ்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.