அவிங்கள முடிச்சிரு..! ஐஸ்வர்யா ராய்க்கு சொல்லும் பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்

 
அ

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புகழ் பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்று இரண்டு பாகங்களாக திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம்.  நடிகர்கள் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, பார்த்திபன்,  நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 இப்படத்தின் இரண்டாம் பாகம் 28ஆம் தேதி அன்று வெளியாகி இருக்கிறது.   பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சோழ அரசை பழிவாங்கும் வெறியை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.  அவர் பேசும் வசனங்கள்,  அலட்சியம் கலந்த பார்வை , காதலை சொல்ல துடிப்பது எல்லாமே ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்து இருக்கிறது.

பொ

 இந்த நிலையில் பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகம் வெளியிட்டு முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கும் நிலையில்,  இந்த திரைப்படத்தை வரவேற்கும் வகையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  பகை மாறா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன .

இந்த போஸ்டரில்,  ’’ஐஸ்வர்யா ( நந்தினி )அக்கா பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே,  கடைசி ஆயுதமே , உலகின் முதல் பெண் பாண்டிய அரசின் மீனாட்சியம்மனோட அருளாசியோட நம்மளையே சீண்டிப் பார்த்த சோழர்கள் இனிமேல் நம்ம பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சிரு’’ என்றும்,   ’’பாண்டிய அரசாகவே இருக்க விரும்பும் எஸ். ஆர். கே. ஆனந்த்,  பகைமறவா பாண்டியரின் வாரிசுகள்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

 பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போதும் மதுரையில் இதே போன்று பகை மறவா பாண்டியன் வாரிசுகள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.  நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.  இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கும் இதேபோன்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.