தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்

 
aa

பைக் ரேஸ் பிரியர் அஜித், வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்குள்ள பைக்  ரேஸர்களுடன்  சேர்ந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டார்.   அடுத்து உலக பைக் பயணம் மேற்கொள்ளப்போகிறார் அஜித் என்ற செய்தி வெளியானது.  அதன்படியே ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பியதும் மீண்டும் பைக் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

டெல்லி தாஜ்மஹாலில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்கள் வெளியாகி வைரலாகின.  அடுத்து வாகா எல்லையில் கையில் தேசியக்கொடியோடும் ராணுவ வீரர்களுடனும் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

a

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அம்ரித்ஸர் நகருக்கும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமமே வாகா.  பாகிஸ்தானையும் இந்தியாவை இணைக்கும் இங்கிருக்கும் எல்லைதான் வாகா எல்லை.    இந்தியா -பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டபோது கிழக்கு வாகா இந்தியாவுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் வகுக்கப்பட்டிருக்கிறது.   இந்த வாகா எல்லையில் நின்றுதான் அஜித் எடுத்த போட்டோக்கள் வெளிவந்தன.

பைக்கில் 67 நாடுகளை சுற்றி  வந்த சாகச பெண் யாசர்லூ வை சந்தித்து, பல  நாடுகளுக்கு பைக் டிராவல் செய்த அனுபவங்களை பேசிய அஜித்தின் படங்களும் வைரலாகின. 

தற்போது அஜித், தார் பாலைவனத்தில் பைக்கை நிறுத்திவிட்டு,  அந்த பைக்கின் நிழலியே அமர்ந்து தண்ணீர் குடிக்கும் புகைப்படம் வெளியாகி அது வைரலாகி வருகிறது.

நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில்தான் தார் பாலைவனத்தில் ஓய்வெடுத்திருக்கிறார் அஜித்.