திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுஇடங்களில் மதுஅருந்தினால் நடவடிக்கை - எஸ்.பி. சீனிவாசன் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பொதுஇடங்களில் மது அருந்தினாலோ அல்லது மது விற்பனை செய்தாலோ இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகார்களை தெரிவிக்க திண்டுக்கல் நகர் - 9498101521, திண்டுக்கல் ஊரகம் - 9498101522, நிலக்கோட்டை - 9498101523, பழனி - 9498101524, ஒட்டன்சத்திரம் - 9498101525, கொடைக்கானல் - 9498101526 மற்றும் வேடச்சந்தூர் - 9498101527 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் - 9498101520 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுஅருந்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.