காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம்!
காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக்கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், ₹210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கி விட்டார்கள் வருமான வரித் துறையினர். இப்பொழுது எங்களிடம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கோ அல்லது மின்சார கட்டணம் செலுத்தக்கூட பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான். பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது ஜனநாயக விரோத போக்கு என்றும் நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.