பேரறிஞர் அண்ணா நினைவு நாள் - மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு!!

 
tn


அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

tn

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, 3.02.2024 அன்று நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாளை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருப்படம் வைக்கப்பட்டுள்ளது.

stalin

மேற்குறிப்பிட்ட இடத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.