அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம் - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்!

உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்!

அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்.


எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.