அதிமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை? - டிடிவி தினகரன் கேள்வி

 
ttv dhinakaran

திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவினரின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவினரின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.