ரமலான் பெருநாளில் சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும் - டிடிவி தினகரன் வாழ்த்து!

 
ttv

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாம் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடத்திலும் அன்பு, அனைத்து செயல்களிலும் அறம், எளியோருக்கு ஈதல் ஆகிய நற்குணங்களை வலியுறுத்திய நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் பின்பற்றுவோம். நம்பிக்கையும் நன்மையும் நிலவ விரும்பி நோன்பு நோற்ற இஸ்லாமியர்களின் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

இந்த ரமலான் பெருநாளில் சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும், சமூக நல்லிணக்கம் என்றும் நம்மிடம் தழைக்கட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.