'அமமுக தொண்டர்களுக்கு' டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 
ttv

 மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ttv

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உடலையும் உயிரையும் அன்னைத் தமிழ்மொழிக்காக தியாகம் செய்த அருபெரும் தீரர்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 25.01.2022 (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். அன்றைய தினம் ஊர்கள்தோறும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கிடுவோம். 

ttv dhinakaran

அனைத்து கழக மாவட்டங்களிலும் உள்ள மாணவர் அணி நிர்வாகிகள் அந்தந்த பகுதியிலுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அன்னைத் தமிழ்மொழியைக் காத்து நின்றிடவும் நம் தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்திடவும் காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்.இந்நிகழ்வுகள் அனைத்திலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிடுமாறு கழக  உடன்பிறப்புகள் அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.