தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள் - அன்புமணி, அண்ணாமலை ட்வீட்!!

 
anbumani

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை  இன்று வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை , ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

anbumani

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது  ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் மற்றும் புதுவையில் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 93.76% மாணவர்களும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 90.07% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! பொதுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்று கருதுகிறேன். தேர்வுக்கு வர இயலாததால் தான் பலர் தேர்ச்சியடையவில்லை. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.  


அதேபோல்  பாஜக தலைவர் அண்ணாமலை, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! 'பரிட்சை' - எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. சரித்திரத்தில் இருந்ததுமில்லை. குறைவான மதிப்பெண் (தங்களுடைய கணக்கின்படி), தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்-'உங்கள் வாழ்க்கை உங்களுக்காக ஒரு பெரிய கதவைத் திறப்பதற்கு தயாராக இருக்கிறது' துணிவோடு, தைரியமாக பயணியுங்கள்! என்று கூறியுள்ளார்.