திருவண்ணாமலை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்..

 
திருவண்ணாமலை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்..

திருவண்ணாமலை மாவட்டத்தை  2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்கக்  கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதில் பேசிய  அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன; இதை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.  

திருவண்ணாமலை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்..

வேலூர் மாவட்டத்தைக் விட திருவண்ணாமலை மாவட்டம் பெரியது. சிப்காட் உள்ளிட்ட எந்த வசதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் உள்ளது.  பரப்பளவு, மக்கள் தொகையில் பெரிதாக உள்ள திருவண்ணாமலையை பிரிக்காதது ஏன்?. அதைபோல சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்” என்று கூறினார்.