தமிழகத்தின் நெடுஞ்சாலை திட்டங்களை கைவிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்...

 
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தின் 4 பெரிய நெடுஞ்சாலை திட்டங்களை கைவிட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்திருப்பது, சாலை விரிவாக்க திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ திருப்பெரும்புதூர் - வாலஜா தேசிய நெடுஞ்சாலையை 6 வழிப் பாதையாக மாற்றுவதற்கான இரு திட்டங்கள் மற்றும் கேரள எல்லை - கன்னியாகுமரி சாலையை 4 வழியாக மாற்றுவதற்கான இரு திட்டங்களை கைவிட நெடுஞ்சாலைகள் ஆணையம் தீர்மானித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

சேலம் எட்டு வழிச் சாலையை 2025க்குள் முடிக்க இலக்கு! -தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி - சோழபுரம் 4 வழிச்சாலை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தாத இடங்களில் சாலை அமைக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. இது இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

புயல் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை நீட்டிப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்காதது தான் இதற்கு காரணம் என்று ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நெடுஞ்சாலைகள் ஆணையம் தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுப்பது தவறு.  ஆணையத்தால் கைவிடப்படுவதாகவும், பாதியில் பணியை நிறுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள சாலைகள் முக்கியமானவை; தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவுபவை. அவற்றை கைவிட்டு விடாமல்  மாநில அரசின் ஒத்துழைப்பைப் பெற்று பணிகளை ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.