ஷெல்ஸ் கடற்படை கைது செய்த மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை..

 
புயல் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை நீட்டிப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி  ஷெல்ஸ் கடற்படையால்  கைது செய்யப்பட்ட தமிழக  மீனவர்கள் 16 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 25 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்கள், 9 வட இந்திய மீனவர்கள் என 25 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மீனவர்கள்

குமரி மாவட்டத்திலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற மேலும் 33 மீனவர்கள் கடந்த 7-ஆம் தேதி செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்தோனேஷிய எல்லைக்குள் நுழைந்ததாக  குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்களின் நோக்கம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதோ, சட்டவிரோத செயல்களை செய்வதோ அல்ல... வாழ்வாதாராம் ஈட்டுவதற்காக சென்ற அவர்கள் எல்லை தெரியாமல் தான் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று விட்டனர். இதை கருத்தில் கொண்டு அவர்களை  விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். “ என்று குறிப்பிட்டுள்ளார்.