சமூகக் குறைபாடுகளையும் மருத்துவர்களால் போக்க முடியும் - அன்புமணி ட்வீட்

 
anbumani

உடல், மன நலக் குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் குறைபாடுகளையும் மருத்துவர்களால் போக்க முடியும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

doctors

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவராக பணியைத் தொடங்கி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக உயர்ந்த  மருத்துவர் பி.சி.இராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.


இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் பி.சி.இராய்.  உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் கேடுகளையும் அகற்ற வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்களால் சாதிக்க முடியும்.  தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.