மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி
மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இதையடுத்து மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூபாய் 27.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!(1/3)#EBBillHike
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 10, 2022
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது! மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல! மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.