போதையில் 2 வயது குழந்தை கொலை - குற்றங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி!!

 
pmk

முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

baby

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே காமராஜர் நகரில் இரண்டு வயது குழந்தையை தந்தை டேவிட் சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கணவன் மனைவி இடையிலான பிரச்சனையில் குடிபோதையில் பெற்ற குழந்தையை தந்தையே கொன்றது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தந்தை டேவிட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும். அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது! குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க  மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்! " என்று கேட்டுக்கொண்டார்.