அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை!!

 
tn

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tn

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய  மின்சார தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு  எழுந்தது.  இதையடுத்து அமலாக்க துறையினர் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் எதிரொலியாக அமலாக்க துறையினர் இன்று நள்ளிரவு செந்தில் பாலாஜியை  கைது செய்தனர்.  

tn

அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .  ஐசியூவில் அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவரை காண மருத்துவமனையில் அமைச்சர்கள் முகாம் இட்டுள்ளனர். இதை தொடர்ந்து  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை  நேரில்  சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

tn

இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது; இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.