"அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவு" - முதலமைச்சர் இரங்கல்!!
Feb 13, 2024, 12:47 IST1707808666292
அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய என்.ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது;
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உழைப்பையும், வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்;
தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்;
அறிவாலயம் ஜெயக்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பிரிவால் வாடும் குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.