அண்ணாமலை நூதன பிரச்சாரம் : கும்மி நடனமாடி வாக்கு சேகரிப்பு..!

 
1

வரும் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவார். ஹாட்ரிக் சாதனை படைப்பார் என பேசி வருகின்றனர். அதே சமயத்தில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதைதொடர்ந்து, கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளக்கிணறு பகுதியில் அவருக்கு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை பார்த்த வேட்பாளர் அண்ணாமலை, வேனில் இருந்து கீழே இறங்கிபொதுமக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி நடனம் ஆடினார். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இதுகுறித்து அண்ணாமலை கூறும்போது, வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரிய கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.