பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார் அண்ணாமலை!

 
annamalai

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.  ஜூலை 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை வெற்றிகரமாக இரண்டாம் கட்டம் வரை முடிவடைந்தது.  ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெற்ற இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும்  வாக்கு வங்கியை பெற்று தரும் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். இதை தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அண்ணாமலையின் உடல்நிலை காரணமாக பாதயாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். காலை 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாதையாத்திரையை தொடங்கினார்.  இந்த பாதையாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். அண்ணாமலைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும்  தொடங்கியுள்ளது.