ரஃபேல் வாட்சுக்கான பில்லை வெளியிட்டார் அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்சுக்கான பில்லை இன்று வெளியிட்டார். ]
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசிக்க தொடங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் தெரிவிக்கும் அனைத்து புகாருக்கும் ஆதாரம் இருப்பதாக கூறினார். அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்காக நான் இங்கே வரவில்லை எனவும் அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்சுக்கான பில்லை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், காவல் பணியில் இருந்த போது லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். அந்த வாட்சை தனக்கு கொடுத்ததே நண்பர் தான். நண்பர் ஒருவர் தனக்கு வழங்கிய அந்த ரஃபேல் வாட்சின் விலை 3 லட்சம் ரூபாய் மட்டுமே. சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து தான் நான் அந்த வாட்சை வாங்கினேன். இவ்வாறு கூறினார்.