கோவை குற்றாலம் மூடுவதாக அறிவிப்பு

 
கோவை குற்றாலம் மூடுவதாக அறிவிப்பு கோவை குற்றாலம் மூடுவதாக அறிவிப்பு

சிறுவானி நீர் பிடிப்பு பகுதிகளில் அடை மழை பெய்துவருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடுவதாக தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை குற்றாலம் | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கின் காரணமாக  தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திடீரென நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையிலே கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன்  மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.  இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம், குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பி என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்ப்பு வருகின்றனர்.