4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு...

 
4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு...

தமிழகத்தில் உள்ள 4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  4 பல்கலைக்கழகங்களில்  பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவந்தது. பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் இருந்து வருகிறது.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக கடந்த  2021 டிசம்பர் மாதம் தான் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனால்  லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாகவும், பட்டமளிப்பு விழா நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 ஆளுநர் ஆர்.என் ரவி

இந்த நிலையில் தற்போது  4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை பல்கலைகழகத்தில்  பட்டமளிப்பு விழா ஜூன் 16-ம் தேதியும்,  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழா  ஜூன் 28-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் பல்கலை.க்கு ஜூன் 19-ம் தேதியும், நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7-ம் தேதியும்  பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில்  பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.