நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 
school

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.

school

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 6 - 10ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரையும், 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.