சென்னையில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வு எப்போது? - வெளியானது அறிவிப்பு

 
school

சென்னையில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு வரும் 18-ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கடந்த 03ம் தேதி நிறைவடைந்தது. இதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 1- 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது.  அதில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21- ஆம் தேதிக்கும் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும், . 4 முதல் 9 -ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் 28 தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  ஏப்ரல் 28-ந் தேதி பள்ளிக்கு கடைசி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் வருகிற 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  6,7,8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை முழுஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.