"86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பணியிடங்கள்" - பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் 13 இயக்குனர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட பணி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 3 உதவி இயக்குனர்கள் மற்றும் 7 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
குழந்தைகள் மகளிர் மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினர் ,இன சமூகங்கள் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்துறையின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு, மாவட்ட அளவில் உதவி இயக்குனர் நிலையில், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் வட்டார அளவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் 13 உதவி இயக்குனர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தமிழக முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தொகை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு ,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் குழுமை இயக்குனர் அமுதவல்லி, சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.