ஹாஸ்டலில் தங்கியிருப்பவரா நீங்கள்? மே 5 முதல் காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்!
ஈரான் மீது நடக்கும் கூட்டுத்தாக்குதலின் காரணமாக உலகளவில் எரிசக்திகளின் விலைகள் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி உள்ளூர் விமான நிறுவனங்களுக்கான உள்நாட்டு எல்பிஜி மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலைகளில் மாற்றம் இல்லை. இருப்பினும், சர்வதேச விமான நிறுவனங்களுக்கான ஜெட் எரிபொருள் விலைகள் 5% உயர்த்தப்பட்டுள்ளன . இதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளும் நிலையாகப் பராமரிக்கப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (IOC) கூற்றுப்படி, பொதுமக்கள் உபயோகப்படுத்தும் முக்கிய எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மே 1 முதல் அமலுக்கு வந்தது. டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை தற்போது ரூ. 3,071.50 ஆக உள்ளது. இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் போன்ற வணிகங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக நுகர்வோருக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, சுமார் 80 சதவிகித பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் 4 சதவிகிதம் மலிவாகியுள்ளன மற்றும் 16 சதவிகிதம், பெரும்பாலும் தொழில்துறை எரிபொருட்களில், விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. வர்த்தக எல்பிஜி, மொத்த டீசல் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் போன்றவற்றின் விலை மாற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வால், கடைகளில் விற்கக்கூடிய டீ மற்றும் காபி விலை உயர்ந்துள்ளது. மேலும், பல உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது, விடுதிகளின் கட்டணமும் 10% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1000 மே 5ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழ்நாடு IT ஹாஸ்டல், விடுதி அசோசியேஷன் அறிவித்துள்ளது.

