அரியலூர் தீ விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Oct 9, 2023, 12:38 IST1696835338994
அரியலூர் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வெடி விபத்தில் 9 இருசக்கர வாகனங்கள் , ஒரு டெம்போ ட்ராவலர் வேன் உள்ளிட்டவை இருந்து சேதமடைந்துள்ளது.
தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.