அரியலூர் பட்டாசு ஆலை விபத்து வேதனை அளிக்கிறது - அண்ணாமலை

 
Annamalai

அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலியான நிலையில் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அரியலூர் மாவட்டம் விரகாலூர் பகுதியில், நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில், 7 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன். அனைவர் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.