அவதூறு வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட்!

 
rk selvamani

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி செய்தியாளர் சந்திப்பின் போது  பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தரப்பில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஆர்.கே.செல்வமணி ஆஜராகாததால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.